search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப்பிடாரம் கொலை"

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இன்று அதிகாலை கோழிக்கடை வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார்(வயது 29). இவர் அக்கநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்காவும்(4), 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து கனிஷ்கா உதயகுமாருடனும், மற்றொரு குழந்தை மாஷாதேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கிவிடுவார். இதே போல் நேற்றும் கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.

    இதைத் தொடர்ந்து கணவன்-மனைவியை சேர்த்து வைக்க இது தொடர்பாக இரு வீட்டார் பெரியவர்களும் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உதயகுமார் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞானசம்பந்தர், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் பலியான உதயகுமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உதயகுமார் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் நிறுத்தம் அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×